நெல்லை, செப். 10: வாசுதேவநல்லூர் தங்கப்பழம் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா விமரிசையாக நடந்தது. வாசுதேவநல்லூர் தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. எஸ்.தங்கப்பழம் குழுமங்களின் நிறுவனா் தங்கப்பழம் வாழ்த்துத் தெரிவித்தார். பள்ளித் தாளாளா் முருகேசன், ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்பு, பரிசுகள் வழங்கி கவுரவித்தார். பள்ளி முதல்வா். டெய்ஸிராணி சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியா–்கள் நன்றி தெரிவித்தனர். இதையொட்டி ஆசிரியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. மழலையா் பள்ளித் தலைமை ஆசிரியை ராஜராஜேஸ்வரி விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்