×

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு வீடு கட்ட நிதி கேட்டு மனு

விருதுநகர், செப். 10: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், மொட்டமலை பிள்ளையார்குளத்தை சேர்ந்த நரிக்குறவர் பெண்கள், தலைவர் லிங்கம் தலைமையில், கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மொட்டமலை பிள்ளையார் குளத்தில் 100 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அரசு வழங்கிய இலவச நிலத்தில் குடிசை போட்டு வசித்து வருகிறோம். அரசு வழங்கிய இடத்தில் பசுமை வீடு அல்லது மத்திய அரசு திட்டத்தில் வீடு கட்ட நிதியுதவி அளிக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி