×

அரசு மருத்துவமனையில் ஆய்வு

திருவில்லிபுத்தூர், செப். 10: திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ சந்திரபிரபா முத்தையா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மின்கம்பம் உடைந்து விழுந்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் திருவில்லிபுத்தூர் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் நொச்சிகுளத்தை சேர்ந்த குருசெல்வம், சின்னஅத்திகுளத்தை சேர்ந்த ஸ்ரீராம் ஆகியோரை பார்வையிட்டு நலம் விசாரித்தார். மேலும், அரசு மருத்துவமனையின் தரம் குறித்து ஆய்வு  மேற்கொண்டார். அப்போது, மருத்துவர்கள் ‘டிஜிட்டல் ஏக்ஸ்ரே மெஷின்’ வேண்டும் என எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ‘டிஜிட்டல் ஏக்ஸ்ரே மெஷின்’ வாங்கி தரப்படும் என எம்.எல்.ஏ
உறுதியளித்தார்.

Tags : Inspection ,Government Hospital ,
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்