×

நகராட்சியைக் கண்டித்து ‘மாஸ்க்’ போராட்டம் மாநில அளவிலான கபடி போட்டி

சாத்தூர், செப். 10: சாத்தூரில் மாநில அளவிலான கபடி போட்டி மின்னொளியில் நடைபெற்றது.நாக்அவுட் முறையில் நடந்த இந்த போட்டியில் கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 58 அணிகள் கலந்து கொண்டன.நேற்று முன்தினம் மாலை நடந்த இறுதிப்போட்டியில் சிவகாசி, சாத்தூர் அணிகள் மோதின. எம்எல்ஏ ராஜவர்மன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் 40-20 என்ற புள்ளி கணக்கில் சிவகாசி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற சிவகாசி அணிக்கு எம்எல்ஏ ராஜவர்மன் பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கினார்.இதில் மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் சேதுராமானுஜம், நகர செயலாளர் வாசன், ஒன்றியச் செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர்கள் ராமராஜ், மணிகண்டன் மற்றும் ரவிச்சந்திரன், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : kabaddi rivalry ,
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி