×

தேவதானப்பட்டியில் தொடர் மின்வெட்டு

தேவதானப்பட்டி, செப்.10: தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மின் வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, சாத்தாகோவில்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, மஞ்சளாறுஅணை கிராமம், எருமலைநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, அ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி, மேல்மங்கலம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் இரவு பகல் தொடர்ந்து வெட்டு ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். பகலில் ஏற்படும் மின்வெட்டால் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் தேவதானப்பட்டி பகுதியில் சீரான மின் சப்ளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Devadanapatti ,
× RELATED விவசாயிகளுக்கு பயிற்சி