×

உத்தமபாளையம் பள்ளி மாணவர்கள் அசத்தல்

உத்தமபாளையம், செப்.10: உத்தமபாளையம் எஸ்.ஏ.பி. மெட்ரிக் மேல்நிலைப்ள்ளி மாணவர்கள் பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். உத்தமபாளையம் எல்.ஐ.சி. 63ம் வருட தொடக்கவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இடையே கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளை நடத்தியது. பேச்சு போட்டிகளில் எஸ்.ஏ.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி கனிஷ்டா ஜெக்லின் இரண்டாமிடத்தையும், யாசிகா சைந்தவி மூன்றாமிடத்தையும், கட்டுரை போட்டியில் 8ம் வகுப்பு மாணவி விவேகா இரண்டாமிடத்தையும் பெற்றனர். இவர்களை பள்ளியின் தாளாளர் ஆறுமுகம், செயலாளர் கண்ணன் ஆகியோர் பாராட்டினர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் முத்துக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : Uthamapalayam School ,
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு