×

2 மாதமாக சம்பளம் தராமல் இழுத்தடிப்பு

தேனி, செப்.10: கடலைக்குண்டு ஒன்றியத்தில் பணிபுரியும் மேல்நிலைத் தொட்டி திறப்பாளர்கள் கலெக்டரிடம் நிலுவைச் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முத்தாலம்பாறை, மூலக்கடை ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலைத் தொட்டி திறப்பாளர்கள் மற்றும் தூய்மை காவல் பணியாளர்கள் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் பல்லவிபல்தேவிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில், மேல்நிலைத் தொட்டி திறப்பாளர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சம்பள நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். முத்தாலம்பாறை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவல்பணியாளர்களுக்கு 2 மாதமாக வழங்க வேண்டிய சம்பத்தை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...