×

அனைத்துக்கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

சிவகங்கை, செப். 10: சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ததை கண்டித்து அனைத்துக்கட்சிகள் பங்கு பெற்ற கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்டத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். காங்கிரஸ் சட்டமன்றக்குழுத்தலைவர் ராமசாமி, காங்கிரஸ் அகில இந்திய பொது செயலாளர் சஞ்சய்தத், திமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் எம்எல்ஏ, மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருச்சி வேலுச்சாமி, மகளிர் காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சிராணி ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினர்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்எல்ஏக்கள் சுந்தரம், அருணகிரி, ராம.சுப்புராம், மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், இ.கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ குசேகரன், திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், நகர செயலாளர் துரைஆனந்த், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், மதிமுக மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்

Tags : meeting ,parties ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...