ராமநாதபுரம், செப்.10: ராமநாதபுரம் சூரன்கோட்டை பஞ்சாயத்துக்குட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் வசிப்பவர்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டை பஞ்சாயத்துக்குட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்ப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அருந்ததியர் இனத்தை சார்ந்த ஏழை எளிய வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் நிலையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு அளித்துள்ளனர். மனுவில், அருந்ததியர் இனத்தை சேர்ந்த நாங்கள் மீனாட்சி புரம் பகுதியில் வசித்து வருகிறோம். வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். வசதியில்லாத நிலையில் எங்களால் வாடகை கொடுக்க முடியவில்லை. வறுமைக்கோட்டுக்கு கீழ் கஷ்டப்பட்டு வருகிறோம். எங்கள் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அந்த பகுதியில் 300 வீட்டுமனை இருக்கிறது அந்த இடத்தைப் பிடித்துக் கொடுத்தாலே போதும், கருணை அடிப்படையில் அருந்ததியர் வகுப்பைச் சார்ந்த எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.