மதுரை, செப். 10: மதுரை, அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. 7ம் வகுப்பு மாணவி. நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், அவரது அம்மா பணியாற்றும் கம்பெனிக்கு சென்றுள்ளார். அங்கு கழிவறைக்கு செல்லும்போது, கம்பெனியின் உரிமையாளரான, பழைய குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜாமுகமது (63), சிறுமியை வலுக்கட்டாயமாக அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சிறுமி அவரது அம்மாவிடம் தெரிவித்துள்ளார். அவர் மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் ராஜா முகமது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்