×

கொடைக்கானலில் மனைவியை மிரட்ட விஷம் குடித்தவர் பலி

கொடைக்கானல், செப். 10: கொடைக்கானல் மேல்மலை கிராமம் குண்டுபட்டியை சேர்ந்தவர் சிவராஜா (48). இவரது மனைவி சித்ரா (42). இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் சித்ரா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். சிவராஜா பலமுறை கூப்பிட்டும் சித்ரா வர மறுத்து விட்டார். இதனால் நேற்று முன்தினம் சிவராஜா, மனைவியை மிரட்டும் நோக்கத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
இதில் மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை அருகில்இருந்தவர்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிவராஜா உயிரிழந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்