×

கெங்கவல்லி பகுதியில் கள்ளச்சாராய வேட்டை 3 பேர் அதிரடி கைது

கெங்கவல்லி, செப்.10: கெங்கவல்லி பகுதியில் கள்ளச்சாராய வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கெங்கவல்லி மற்றும் சுற்று வட்டார பகுதியில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று சாத்தப்பாடியில் போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். அப்போது, கள்ளச்சாராயம் விற்றதாக ஜீவா(24), திலீப்(24) மற்றும் சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களில், திலீப், ஜீவா ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்புதான ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில், இருவரும் மீண்டும் சாராயம் விற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்

Tags : area ,Kengavalli ,
× RELATED அரசமரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்