×

ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்த வேண்டும் மதிமுக வலியுறுத்தல்

கெங்கவல்லி, செப்.10: ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்தும் வகையில் அரசு அறிவிப்பு வெளியிட வேண்டுமென மதிமுக வலியுறுத்தியுள்ளது. தலைவாசல் ஒன்றிய மதிமுக செயற்குழு கூட்டம் வீரகனூரில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் கோபால்ராசு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கலைவாணி, செல்வராசு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்தும் வகையில் அரசு அறிவிப்பு வெளியிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேலும், காவிரி உபரிநீரை வசிஷ்ட நதி மற்றும் சுவேத நதியில் திருப்பி விட்டு விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சீனிவாசன், ஜெயராமன், சுரேஷ் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குபேரன் நன்றி கூறினார்.

Tags : Mathimukha ,district ,headquarters ,Attur ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்