×

டாஸ்மாக் கடையை அகற்ற புதுமந்து மக்கள் கோரிக்கை

ஊட்டி, செப். 10: பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி புதுமந்து பகுதியை சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.இதுதொடர்பாக ஊட்டி புதுமந்து அருகேயுள்ள பாரஸ்ட் கேட், பசுவைய்யாநகர் பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுமந்து, பாரஸ்ட்கேட், பசுவைய்யாநகர் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்நிலையில் இப்பகுதியில் பஸ் நிறுத்ததிற்கு அருகில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்து வருகிறோம். இங்கு மதுபானங்களை வாங்கி அருந்த கூடிய குடிமகன்களால் நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை அனுமதியில்லாத கட்டிடம் ஆகும். டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே ரேஷன்கடை, பால்சொசைட்டி உள்ளது. மது அருந்துபவர்கள் இவற்றின் அருகாமையிலேயே அசுத்தம் செய்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Newcomers ,
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...