×

தேன்கனிக்கோட்டையில் கடையில் பணம் திருடி சிக்கிய சிறுவன் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்

தேன்கனிக்கோட்டை,  செப். 10: தேன்கனிக்கோட்டையில் ஆட்டோ மொபைல் கடையில் பணம் திருடிய சிறுவனை,  பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தேன்கனிக்கோட்டை ராஜாஜி சாலையில் சங்கர்(40) என்பவர் ஆட்டோ மொபைல் கடை  நடத்தி வருகிறார். இவரது கடையில் அடிக்கடி பணம் காணமல் போனது. கடையில் வேலை  செய்யும் 19 வயது சிறுவன் மீது, உரிமையாளருக்கு சந்தேகம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை  சங்கர் கடையின் உள் பகுதிக்கு செல்லும் போது, அங்குவந்த சிறுவன் கல்லா பெட்டியை  திறந்து பணம் திருடியுள்ளார்.அப்போது கடையின் அருகே இருந்த பொதுமக்கள்,  சிறுவனை கையும் களவுமாக பிடித்துள்ளனர். தொடர்ந்து சிறுவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் கடையில் பணம்  திருடியதை சிறுவன் ஒப்புக்கொண்டான். ஆனால் கடையின் உரிமையாளர் சங்கர், சிறுவன் மீது  புகார் கொடுக்க மறுத்துவிட்டார். மேலும், சிறுவனின் பெற்றோரிடம் பேசி திருடுபோன பணத்தை  பெற்றுக்கொள்வதாக கூறிய சங்கர், சிறுவனை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

Tags : shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி