×

தபால் துறையில் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி, செப்.10: தபால் துறையில் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 24ம் தேதி நடக்கிறது.தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீஹரி விடுத்துள்ள அறிக்கை:  தர்மபுரி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம், வரும் 24ம் தேதி மாலை 3 மணிக்கு, தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தபால் துறையின் நுகர்வோர், தங்களது தபால் சார்ந்த புகார்கள் ஏதேனும் இருப்பின் நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Customer grievance day meeting ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா