×

மொரப்பூர் மேம்பாலத்தில் தொடர் சாலை விபத்து போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டுகோள்

அரூர், செப்.10: மொரப்பூர் மேம்பாலத்தில், தொடர் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மொரப்பூரில்  ரயில்வே மேம்பாலத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. சாலை விதிகளை சரியாக பின்பற்றாமல் மேம்பாலத்தில் வருவதே விபத்திற்கு காரணமாக உள்ளது. அரூரிலிருந்து மேம்பாலம் வழியாக நேராக சென்றால் கம்பைநல்லூர், இடது புறம் திரும்பினால் பஸ் ஸ்டாண்ட், தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். இதில் அனைத்து பஸ்களும், பேருந்து நிலையத்திற்கு சென்று விட்டு பாலத்திற்கு கீழ் வழியில் சென்று விடுகிறது.

ஆனால் கிருஷ்ணகிரி, கம்பைநல்லூர் பகுதியிலிருந்து வரும் போது மேம்பாலம் வழியாக வந்து வளைத்து செல்கின்றனர். இதனால் எதிர்திசையில் வரும் வாகனங்களுடன் மோதி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மேம்பாலம் வழியாக செல்ல கூடாது என நெடுஞ்சாலைதுறை சார்பில் எச்சரிக்கை பலகை புதுப்பிக்கப்பட்டு வைத்தும் வாகன ஓட்டிகள் அதனை பின்பற்றுவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும்  நடவடிக்கை எடுத்து கிருஷ்ணகிரி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பாலத்தின் கீழ் வழியாக சென்று பேருந்து நிலையம் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Morapur Bridge ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா