×

போதிய தெரு விளக்குகள் இல்லாததால் கரூர் பொன்நகர் பகுதி மக்கள் இருளில் தவிப்பு

கரூர், செப். 10: கரூர் பொன்நகர் பகுதியில் கூடுதல் தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூரில் இருந்து கோடங்கிப்பட்டி செல்லும் சாலையில் பொன்நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து தாந்தோணிமலை, பால்வார்பட்டி, ஒத்தையூர், கோடங்கிப்பட்டி, திண்டுக்கல், ஈசசத்தம், பாகநத்தம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சாலைகள் பிரிகிறது. நான்கு வழிச்சாலை பிரியும் இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் குடியிருப்புகள் மற்றும் வாகன போக்குவரத்து தேவைக்கேற்ப இந்த பகுதியில் தெரு விளக்குகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதனால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்மை காரணமாக, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் பொன்நகர் பகுதியில் இருந்து கோடங்கிப்பட்டி வரை கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு மக்கள் நலன் கருதி கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்திட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Karur Ponnagar ,
× RELATED கரூர் பொன்நகர் சந்திப்பு பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும்