×

தோகைமலை அருகே சைக்கிள் மீது பைக் மோதி தொழிலாளி பலி

தோகைமலை, செப். 10: கரூர் மாவட்டம் தோகைமலை காவல்சரகம் பண்ணப்பட்டி ஊராட்சி கோமாளிபட்டியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (47). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது சைக்கிளில் பண்ணப்பட்டி அருகே உள்ள பாறைபட்டி முருகன் கோவில் மேடு அருகில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வடவம்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியை சேர்ந்த சிலம்பரசன்(36) என்பவர் ராஜலிங்கத்தின் சைக்கிள் மீது மோதினார்.

இதில் தூக்கி வீசப்பட்ட ராஜலிங்கம் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜலிங்கம் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி லெட்சுமி தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சிலம்பரசன் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : cyclist ,Dohakaimalai ,
× RELATED மதுரவாயல் டோல்கேட் அருகே கார் மோதியதில் சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு