×

திருவாரூர் ரயில்வே மேம்பாலம் அருகே பேருந்து நிழற்குடை, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் பயணிகள் கோரிக்கை

திருவாரூர், செப். 10: திருவாரூரில் கடந்த 45 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த பேருந்து நிலையமானது தற்போது விளமல் அருகே புதிதாக அமைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 27 ந் தேதி திறந்துவைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்திலிருந்து நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் ரயில்வே மேம்பாலம் வழியாக பைபாஸ் சாலையில் செல்வதால் அந்த ரயில்வே மேம்பாலமானது தற்போது பேருந்து நிறுத்தமாக இருந்து வருகிறது.

அந்த இடத்தில் மழை மற்றும் வெயில் நேரங்களில் பாதிக்காத வகையில் பேருந்து நிழற்குடை ஒன்று அமைத்து தரவேண்டும் என்பதுடன் அங்கு குடிநீர் வசதி ,கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvarur Railway Bridge ,
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து