×

தில்லைவிளாகம் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

முத்துப்பேட்டை, செப்.10: தில்லை விளாகத்தில் குண்டும், குழியுமான சாலையால் வாகனஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் ஊராட்சி, ஒன்றியத்தில் பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகும். இங்கு உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்ட பிறகு மக்களின் எந்தவொரு அடிப்படை வசதிகளும் அரசு சார்பில் செய்யப்பட்டாமல் செயலிழந்துள்ளன. இதில் பல பகுதி சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதில் கஜா புயலுக்கு பிறகு அனைத்து சாலைகளும் படுமோசமான நிலையில் உள்ளன. இந்நிலையில் இந்த ஊராட்சிக்குட்பட நமச்சிக்காடு கிராமத்திற்கு தெற்குகாடு சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலையானது சுமார் 1கிமீ. தூரமுள்ள சாலையாகும். இந்த சாலை இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ள சாலை என்பதால் தினந்தோறும் இப்பகுதி மக்கள் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் மாணவர்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சாலை போடப்பட்டு சுமார் பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டதால் தற்பொழுது சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் நடமாட கூட தயங்கி வருகின்றனர். அதேபோல் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி இந்த சேதமான சாலையை ஒன்றிய நிர்வாகம் நேரில் பார்வையிட்டு சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,dirt road ,ditch road ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...