×

மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 10 பேருக்கு காதொலி கருவிகள் கலெக்டர் வழங்கினார்

திருவாரூர், செப். 10: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 பேருக்கு காதொலி கருவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார். திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டுதல், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கல்விக் கடன் வழங்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், முதியோர் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 374 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினர்.

அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறையினரிடம் அந்த மனுக்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். மேலும் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பேர்களுக்கு தலா ரூ 3 ஆயிரத்து 989 மதிப்பிலான காதொலி கருவிகள் மற்றும் ரூ 74 ஆயிரம் மதிப்பில் ஒருவருக்கு பேட்டரி நாற்காலி பேன்றவற்றினை கலெக்டர் ஆனந்த் வழங்கினார். இதில் டி.ஆர்.ஒ பொன்னம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணைகலெக்டர் ஜெயதீபன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Collector of Hearing Equipment ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு