×

நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 1200டன் அரிசி மூட்டைகள் ரயிலில் அனுப்பி வைப்பு

நீடாமங்கலம்,செப்.10: நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 1200டன் அரிசிமூட்டைகள் பொதுவினியோகதிட்டத்திற்கு ரயில்வே வேகன்களில் அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ,மன்னார்குடி பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்து அறுவடை செய்த நெல்களை அரசு நெரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து.அங்கிருந்து பல்வேறு திறந்தவெளி சேமிப்பு மையங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மற்றும் அரவை செய்த அரிசிகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ரயில் பெட்டிகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்கா கவும்,அரிசிகளை பொது வினியோக திட்டத்திற்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வட்டக்கிடங்குகள் மன்னார்குடி,ஆதனூர்,கீழப்பாண்டி மற்றும் மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி பகுதிகளிலிருந்து பொது ரக அரிசி மூட்டைகளை 96 லாரிகளில் 1200 டன் பொது ரக அரிசி மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து 20 ரயில் சரக்கு பெட்டிகளில்(வேகன்) தொழிலாளர்கள் ஏற்றி திருவண்ணாமலைக்கு பொது விநியோக திட்டதிற்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Thiruvannamalai ,Needamangalam ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...