×

விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்காததால் மன உளைச்சலில் மூதாட்டி சாவு

கும்பகோணம், செப். 10: கும்பகோணம் காமராஜ் நகரை சேர்ந்தவர் கனகசபை (85). இவர் காதி வாரியத்தில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தமிழரசி (75). இவர்களுக்கு திருமணமான 3 குழந்தைகள் உள்ளனர். காமராஜ் நகரில் கனகசபையும், தமிழரசியும் தனியாக வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 24ம் தேதி தனது வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ரூ.69 ஆயிரம் திருட்டு போனது. இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் கனகசபை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சந்தேகத்துக்கு உரியவர்களை அழைத்து விசாரிக்கவில்லை.

இந்நிலையில் தமிழரசி பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்ததால் கனகசபை தனது வீட்டின் நகையை அடகு வைத்து மருத்துவ செலவுக்காக வைத்திருந்த ரூ 69 ஆயிரம் திருட்டு போனதால் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். மேலும் மன உளைச்சலில் இருந்த தமிழரசி மருத்துவ செலவு செய்ய வழி இல்லாததால் கடந்த 2 நாட்களாக உடல்நிலை மிகவும் மோசமானது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென தமிழரசி இறந்துவிட்டார்.

Tags : police investigation ,Farmer's Association ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...