×

மாநில அளவில் சாரண சாரணிய பேரணி சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

சீர்காழி, செப்.10: சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் மாநில அளவிலான சாரண சாரணிய பெருந்திரள் பேரணி நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாரண மாணவர்கள் நாகை மண்டலம் சார்பில் கலந்து கொண்டு அணிநடைப்பயிற்சி, சாகச விளையாட்டு, விழிப்புணர்வு நாடகம் மற்றும் முதலுதவி, பொதுச்சேவை போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சான்றிதழ் மற்றும் பதக்கம் வென்றனர். அத்துடன் சீருடை ஒற்றுமை, பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி அடையாள குறியீடு போன்ற போட்டிகளில் ஏ பிரிவு சான்றிதழ் மற்றும் அடையாள முத்திரை சின்னம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த சாரண ஆசிரியர் சத்தியசீலனையும் பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், இயக்குநர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் ஜோஸ்வா பிரபாகரசிங், துணை முதல்வர் சரோஜா தாமோதரன், நிர்வாக அலுவலர் சண்முகம், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags :
× RELATED நாகப்பட்டினத்தில் நீட் தேர்வு 530 மாணவர்கள் எழுதினர்