×

மாணவர்களுக்கு அறிவுரை காரைக்காலில் நிலத்தடி நீர் குறைந்து வருவதால் பயன்படுத்துவதில் சிக்கனம் தேவை

காரைக்கால், செப்.10: காரைக்காலில் நிலத்தடி நீர் குறைந்துவருவதால், தேவைக்கு மட்டும் பயன்படுத்தவேண்டும் என புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார். காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் உள்ள இளையான்குடி கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த ஆழ்குழாய்களில் நீர்வரத்து குறைவு மற்றும் பழுது காரணமாக மாற்று இடத்தில் ஆழ்குழாய் அமைப்பு பணியை மாவட்ட வேளாண் துறை தொடங்கியுள்ளது. இப்ணியை, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் விக்ராந்த்ராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர்.பின்னர், அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களுக்கு அளத்த பேட்டி:

காரைக்கால் மாவட்டத்தில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள், ஏரிகளை வெட்டி காவிரி நீர் மற்றும் பருவமழையின்போது கிடைக்கும் தண்ணீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் சிறப்புத் திட்டம் வகுத்து தூர்வாரி வருகிறது. மேலும், இப்பகுதியில் நிலத்தடியில் நீர் இருப்பின்மையால் மாற்று இடத்தில் குழாய் பதிப்பு செய்யப்படுகிறது. இதேபோன்ற குறைகள் உள்ள இடத்தில் ஆழ்குழாய் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, நிலத்தடி நீர் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, தேவைக்கு மட்டும் நிலத்தடி நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து, திருநள்ளாற்றை அடுத்த தென்னங்குடி சாலையோரத்தில் சுமார் 360 குழி நில அளவில் நடைபெறும் குளம் வெட்டும் பணியை அமைச்சரும், கலெக்டரும் நேரில் பார்வையிட்டு பணியை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினர்.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்