×

குளத்தூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

குளத்தூர், செப். 11: குளத்தூர் பகுதி கிராமங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிப்பிகுளம் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. குளத்தூர், குளத்தூர் காலனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான கு.சுப்பிரமணியபுரம், வீரபாண்டியாபுரம், த.சுப்பையாபுரம், முத்துராமலிங்கபுரம், வேடநத்தம், புளியங்குளத்தில் கடந்த 2ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பஜனைகள், பாட்டு கச்சேரி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் குளத்தூரில் அன்னதானம் நடந்தது.

தொடர்ந்து முக்கிய வீதிகளில் வழியாக தாரை தப்பட்டை மேள தாளத்துடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. மாலை 5 மணிக்கு அனைத்து கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகளை போலீஸ் பாதுகாப்புடன் அருகிலுள்ள சிப்பிகுளம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை குளத்தூர் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, எஸ்ஐ செல்லத்துரை மற்றும் போலீசார் செய்திருந்தனர்.


Tags : Ganesha ,
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்