×

கலெக்டர் அலுவலகத்துக்கு குழந்தைகளுடன் தீக்குளிக்க டீசல் கேனுடன் வந்த பெண்

தூத்துக்குடி, செப். 10: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு இளம்பெண், தனது மகன் மற்றும் மகளுடன் வந்தார். அவர் கையில் சிறிய பிளாஸ்டிக் கேன் ஒன்றை வைத்திருந்தார். சந்தேகமடைந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி அவர் வைத்திருந்த கேனை பறிமுதல் செய்து விசாரித்தனர். அவர், பெருங்குளத்தை சேர்ந்த ராஜன் மனைவி பேச்சியம்மாள் (37) என்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் கேனில் டீசல் இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், பேச்சியம்மாளின் கணவர் ராஜன், சில ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டதும், இதை தட்டிக் கேட்ட பேச்சியம்மாளிடம் ராஜன் மற்றும் உறவினர்கள் தகராறு செய்து வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மனமுடைந்த பேச்சியம்மாள் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில்   கேனில் டீசலுடன் வந்ததும் தெரிந்தது. இதையடுத்து டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார், பேச்சியம்மாளுக்கு அறிவுரை வழங்கி, காவல்நிலையத்தில் புகார் அளிக்க அனுப்பி வைத்தனர்.


Tags : collector ,children ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...