×

வேலை கிடைக்கும் வரை கல்விக்கடனை வசூலிக்க கூடாது லெனினிஸ்ட் கலெக்டரிடம் கோரிக்கை

நாகர்கோவில், செப்.10: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (ரெட் ஸ்டார்) மாவட்ட செயலாளர் வக்கீல் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனு:  தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்கள் கல்விக்கடன் பெற்றுள்ளனர். இந்த கல்விக்கடனில் வராக்கடன்களை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்சுக்கு கொடுத்துள்ளனர். இதில் பாரத ஸ்டேட் வங்கிக்கு வழங்க வேண்டிய பணம் தவிர மீதி பணத்தை ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்து கொள்ளலாம் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இதற்கு நிதியமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ளது. கல்வி கடன் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை கடனை வசூலிக்கக்கூடாது. மேலும் வசூல் என்ற பெயரில் வீடு புகுந்து மிரட்டுதல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Tags : Leninist Collector ,
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு