×

பி.டி.ஓ. மகள் தற்கொலை


ஆவடி,செப்.10: ஆவடி, கோவர்த்தனகிரி சீனிவாசநகர், ஏழுமலை நாயக்கர் தெருவைச்சேர்ந்தவர் வெங்கடேசன். பெரியபாளையத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக (பி.டி.ஒ) பணியாற்றி வருகிறார். இவரது  மகள் தீபிகா (19).  திருவேற்காடு அருகே வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் ரேடியாலஜி முதலாமாண்டு படித்து வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன், தனது  மனைவியுடன் வெளியே சென்று வீடு திரும்பினார். அப்போது, தீபிகா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டு உள்ளார்.  இதனை பார்த்த பெற்றோர், அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தீபிகா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Tags : Pitio Daughter ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை