×

பொதுமக்கள் கோரிக்கை கறம்பக்குடி அருகே மணல் திருடிய டிப்பர் லாரி பறிமுதல்

கறம்பக்குடி, ஆக.22: கறம்பக்குடி அருக் மணல் திருடிய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வந்த தகவலை அடுத்து கறம்பக்குடி சப் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டு வந்த டிப்பர் லாரி மறித்து சோதனை நடத்தினர்.விசாரணையில் கறம்பக்குடி அடுத்த தீத்தானிபட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் குமார் என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழகு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா