×

புதுச்சத்திரம் அருகே கார் மோதி விவசாயி பலி

சேந்தமங்கலம், ஆக.20: புதுச்சத்திரம் அருகே கார் மோதி விவசாயி பலியானார். படுகாயமடைந்த தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பேளுக்குறிச்சி அடுத்துள்ள சிங்களாந்தபுரம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (40) விவசாயி. தனது தாய் தங்கம்மாளை அழைத்து கொண்டு,  நேற்று முன்தினம் புதுச்சத்திரம் பிரிவு ரோடு அருகே டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், பெரியசாமி மேல் சிகிச்சைக்காக  சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரனை நடத்தி வருகின்றனர். இறந்து போன பெரியசாமிக்கு தனகொடி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Tags :
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா