×

மேலைச்சிவபுரி விஏஓ அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

பொன்னமராவதி, ஆக.14: பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு வருவாய் வட்டம் மேலைச்சிவபுரி விஏஓ அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற விழாவிற்கு பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார்.பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் கருணாகரன், வேந்தன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் ஆகியோர் தென்னை, மா, வேம்பு உள்ளிட்ட கன்றுகளை அலுவலக வளாகத்தில் நட்டனர். வருவாய் ஆய்வாளர் ஜோதி, விஏஓ ஆரோக்கியராஜ், வழக்கறிஞர் தர், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் இளையராஜா, கிராம உதவியாளர்கள் மலைச்சாமி, கமலம், கண்ணன், அயோத்தி, பாரதி அர்ஜூன், பழனிச்சாமி, சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...