×

சின்னாளபட்டியில் சாலை பள்ளத்தால் தவறி விழும் பெண்கள்-சீரமைக்க கோரிக்கை

சின்னாளபட்டி : சின்னாளபட்டி  பேரூராட்சிக்குட்பட்ட 5வது வார்டு ஜீவா நகர் பூஞ்சோலையில் இருந்து பழைய  ஆசாத் தியேட்டர் வரை சாலை செல்கிறது. இச்சாலை 3,4,5 வார்டுகள் பகுதியை  இணைக்கும் சாலையாகவும், அருகிலுள்ள கிராமமான அம்பாத்துரைக்கு செல்லும்  முக்கிய சாலையாக உள்ளது. ஜீவா நகர் பகுதி ரேஷன் கடை அருகே சாலையில் பெரும்  பள்ளம் ஏற்பட்டு மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. ரேஷன் கடைக்கு வரும்  பெண்கள் தண்ணீரை கடந்து செல்லும் போது, அருகில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் இருசக்கர,  நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது தேங்கி நிற்கும் மழைநீர்,  கழிவுநீர் நடந்து செல்பவர்கள் மீது தெறித்து விழுவதோடு, கடைகளுக்குள்  சென்று விடுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க உடனே  நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post சின்னாளபட்டியில் சாலை பள்ளத்தால் தவறி விழும் பெண்கள்-சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chinnalapatti ,5th Ward Jiva Nagar Pooncholai ,Chinnalapatti Municipality ,Old Azad Theater ,Dinakaran ,
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...