×

மதுகுடிக்கும் தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை

மதுகுடிக்கும் தகராறில்
தொழிலாளி அடித்துக்கொலை
ஓசூர், ஜூலை 23:  ஓசூர் அருகே மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பண்ணப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (70). இவர் ஓசூர் அருகே பாகலூர் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சரத்குமார் (25) என்பவருடன், பாகலூரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.  இதில் ஆத்திரமடைந்த சரத்குமார், வெங்கடேசப்பாவை அங்குள்ள பீர்பாட்டிலால் தலையில் பலமாக தாக்கினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேசப்பா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் வெங்கடேசப்பா சடலத்தை கைப்பற்றி, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சரத்குமாரை கைது செய்தனர். மதுகுடிக்கும் தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பாகலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான சரத்குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவர் தனது தாயாருடன் பண்ணப்பள்ளியில் வசித்து வருகிறார்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்