×

மக்கள் நேர்காணல் முகாம் 63 பேருக்கு வீட்டுமனை பட்டா

கும்பகோணம், ஜூலை 18: சிதம்பரநாதபுரத்தில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 63 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் தாலுகா சிதம்பரநாதரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமை வகித்து 63 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 12 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 13 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 15 பேருக்கு பட்டா மாற்றம் ஆணை, 3 பேருக்கு விவசாய உபகரணங்களை வழங்கினார்.கும்பகோணம் ஆர்டிஓ வீராச்சாமி, திருவிடைமருதூர் தாசில்தார் சிவகுமார், மயிலாடுதுறை முன்னாள் எம்பி பாரதிமோகன் பங்கேற்றனர்.


Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா