×

கம்பெனி ஊழியர் கொலை

சென்னை, ஜூலை 16:வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், நூக்கம்பாளையம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோவிந்தன் (42). தனியார் கம்பெனி ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் திடீரென கோவிந்தன் தலையில் சரமாரியாக அடித்துவிட்டு தப்பினார்.இதில், பலத்த காயமடைந்த கோவிந்தன் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், கோவிந்தனை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் முன் விரோதம் காரணமாக நடந்ததா. அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...