×

சொத்து தகராறில் 3 பேருக்கு கத்திக்குத்து

சென்னை: ஆயிரம் விளக்கு ரங்கூன் தெருவை சேர்ந்தவர் மணி (57). இவர் தனது மனைவி சரசு (55), மகன் மகேஷ் (37) ஆகியோருடன் வசித்து வருகிறார். மணி குடும்பத்திற்கும் அவரது சகோதரர்களான அருண்குமார், ஹரி பிரசாத் குடும்பத்திற்கும் சொத்து பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக, நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. சமீபத்தில், மணிக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அருண் மற்றும் ஹரிபிரசாத் ஆகியோர் கடந்த 5ம் தேதி வீட்டில் இருந்த மணி, அவரது மனைவி சரசு, மகன் மகேஷ் ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஹரி பிரசாத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளியான அருண்குமாரை தேடி வருகின்றனர்….

The post சொத்து தகராறில் 3 பேருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Mani ,Ayaar Lamp Rangoon Street ,Sarasu ,Mahesh ,
× RELATED மணிசங்கர் ஐயரின் கருத்துடன் உடன்படவில்லை: காங்கிரஸ்