×

விபத்தா?..கொலையா?: கோவை அருகே 50 வயது பெண் சடலம் சாலையில் உருக்குலைந்த நிலையில் மீட்பு.. போலீசார் விசாரணை..!!

கோவை: கோவை அருகே சாலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது. கோவை சின்னியம்பாளையம் அருகே சாலையோரம் ஒரு பெண் விபத்தில் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது 4, 5 வாகனங்கள் ஏறியதால் அந்த பெண்ணின் உடல் உருக்குலைந்த நிலையில் இருந்தது. முதற்கட்டமாக போலீசார் இது சாலை விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தனர். இதை தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காரில் இருந்து பெண் ஒருவர் கீழே விழுவது தெரியவந்தது. அந்த பெண்ணை காரில் அழைத்து வந்தவர்கள் அவரை சாலையில் தள்ளிவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைந்து விசாரித்து வருகின்றனர். …

The post விபத்தா?..கொலையா?: கோவை அருகே 50 வயது பெண் சடலம் சாலையில் உருக்குலைந்த நிலையில் மீட்பு.. போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Chinniyampalayam ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...