×

சென்னையில் குடிநீர் பஞ்சம் சிறப்பு எஸ்ஐ பயிற்சி திண்டுக்கல்லுக்கு மாற்றம்

திண்டுக்கல், ஜூவ் 27: சென்னையில் குடிநீர் பஞ்சம் எதிரொலியாக சிறப்பு எஸ்ஐ பயிற்சி முகாம் திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்திற்கு மாற்றப்பட்டது.ஆண்டுதோறும் எஸ்ஐக்களாக பதவி உயர்வு பெற சிறப்பு எஸ்ஐக்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். இது வழக்கமாக சென்னையில்தான் நடத்தப்படும். இந்த தேர்வில் 2 மாதமும் அங்கேயே தங்கி பயிற்சி அளிக்கப்படும். ஆனால் இந்தாண்டு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி துவங்கியுள்ளது. மாவட்ட எஸ்பி சக்திவேல் துவக்கி வைக்க, டிஎஸ்பி ஜஸ்டின் பிரபாகர், இன்ஸ்பெக்டர் வினோத், எஸ்ஐ முத்தமிழ் செல்வி ஆகியோர் இப்பயிற்சியை அளித்து வருகின்றனர். எழுத்து தேர்வு, சட்டம் ஒழுங்கு, பொதுஅறிவு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். 2 மாத பயிற்சிக்கு பின்பு சென்னையில் 4 தேர்வுகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களே எஸ்ஐக்களாக தேர்வு செய்யப்படுவார்கள். இதில் திண்டுக்கல் சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பணிபுரியும் 63 சிறப்பு எஸ்ஐக்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.




Tags :
× RELATED பழநியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த...