×

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் பெட்ரோல், டீசல் தரம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு

சேலம், ஜூன் 25: இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் பெட்ரோல், டீசல் தரம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், அதன் பெட்ரோல் பங்க்குகளில் பொதுமக்களுக்கு தரம், அளவு, அடர்த்தி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி சேலம் மண்டலம் சார்பில், அஸ்தம்பட்டி சேலம் பியூல்ஸ் பெட்ரோல் பங்க்கில், விழிப்புணர்வு முகாம் நடந்தது.

எச்பி தலைமை மேலாளர் செல்லபிரபு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சேலம் ஸ்டேட் பாங்க் மண்டல மேலாளர் ஷாம் சுந்தர் பிரசாத், ஏடிஎம் மேலாளர் வெங்கடேஷ்குமார் கலந்துகொண்டனர். இதில், பொதுமக்கள் முன்னிலையில் பங்க்கில் இருந்து பெட்ரோல், டீசலை அளவு குடுவையில் பிடித்து அதன் தரம், அடர்த்தி போன்றவை சரிபார்க்கப்பட்டது. வாடிக்கையாளர்களையும் அளவை சரிபார்த்துக் கொள்ளச் செய்தனர். இந்நிகழ்ச்சியில் எச்பி சேலம் மேலாளர் வெங்கடேஸ்வர ராவ், உதவி விற்பனை மேலாளர் ஆனந்த், பங்க் உரிமையாளர் எக்கியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Hindustan Petroleum Corporation ,
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா