×

மயிலாப்பூரில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட சென்னை வாலிபர் சரண்

சேலம், ஜூன் 25: சென்னை மயிலாப்பூரில் நடந்த கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.சென்னை மயிலாப்பூரைச்சேர்ந்தவர் தினேஷ்(24). இவரை கடந்த 16ம்தேதி சிலர் அவரை கொலை செய்தனர். இது ெதாடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்ட வந்த சென்னை சோழிங்கநல்லூர் துரைபாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த ராஜேஸ்(30) என்பவர் சேலம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். பின்னர் இவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Charan ,Chennai ,Mylapore ,
× RELATED சென்னை மயிலாப்பூரில் இருசக்கர...