×

போச்சம்பள்ளி அருகே 2 தலையுடன் கன்றுக்குட்டி

போச்சம்பள்ளி, ஜூன் 25: போச்சம்பள்ளி அருகே மாதம்பதி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணிவண்ணன். இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அவர் வளர்த்து வரும் பசுமாடு ஒன்று கன்று ஈன்றது. அந்த கன்று 2 தலையுடன் பிறந்தது. அந்த அதிசய கன்றுக்குட்டியை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஆனால், பிறந்த அரைமணி நேரத்திலேயே அந்த கன்றுக்குட்டி இறந்து விட்டது.


Tags : Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...