×

தர்மபுரி அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

தர்மபுரி, ஜூன் 25:  தர்மபுரி அருகே கவுண்டனூர் பகுதியில், ரயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார். அவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாலக்கோட்டிற்கும், மாரண்டஅள்ளிக்கும் இடையே கவுண்டனூர் என்ற இடத்தில், நேற்று  ரயில்வே தண்டவாளத்தில் உடல்  நசுங்கிய நிலையில் வாலிபர் சடலம் கிடந்தது. தகவலின் பேரில், ரயில்வே போலீசார் விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இறந்தவர் யார் என தெரியவில்லை. அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசி சென்றார்களா ? என்ற கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



Tags : train accident ,Dharmapuri ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...