×

குவிந்து கிடக்கும் குப்பைகள் நீடாமங்கலத்திலிருந்து விருதுநகருக்கு 945 டன் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைப்பு

நீடாமங்கலம்,ஜூன்25: நீடாமங்கலத்தில் இருந்து விருதுநகருக்கு 945டன் நெல் மூட்டைகள் ரயிலில் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி பகுதியிலிருந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டுவரப்பட்டு நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டத்திற்கு ரயில் வேகன் களில் பொது விநியோகத்திட்டத்திற்கு அரிசியும் ,அரவைக்காக நெல் மூட்டைகளும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அசேசம்,ஆதனூர்,தலையாமங்கலம்,இடையர் நத்தம்,தெற்குநத்தம், முவாநல்லு£ர் மற்றும் நவீன அரிசி அலை சுந்தகோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சன்ன ரக நெல் மூட்டைகளை நேற்று 75 லாரிகளில் 945 டன் நெல்மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து 21 வேகன்(ரயில் பெட்டிகளில்) விருதுநகர் மண்டலத்திற்கு அரவைக்காக தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Tags : Needamangalam ,Virudhunagar ,
× RELATED கோடை நடவு பயிரில் எலிகளை கட்டுப்படுத்த பறவை தாங்கி