×

வழக்கு விசாரணை நிலையை அறிந்து கொள்ள நீதிமன்றத்தில் தொடுதிரை கணினி வசதி நீதிபதி துவக்கி வைத்தார்

அறந்தாங்கி, ஜூன் 25: அறந்தாங்கி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை குறித்த நிலையை அறிந்து கொள்ள தொடுதிரை கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற வழக்கு விசாரணை தொடர்பான நிலையை அறிந்து கொள்ள புதிதாக தொடுதிரை கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்டுள்ள தொடுதிரை கணினி வசதியை அறந்தாங்கி சார்பு நீதிமன்ற நீதிபதி அமிர்தவேல் பயன்பாட்டிற்காக தொடக்கி வைத்தார். விழாவில் வழக்கறிஞர் சங்கம் அறந்தாங்கி தலைவர் கண்ணன், துணைத்தலைவர்கள் ராம்குமார், ஜான்சிமகாராணி, பொருளாளர் பழனிவேல், முன்னாள் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்த தொடுதிரை கணினி மூலம் வழக்கு எண்ணை பதிவு செய்து, அடுத்த விசாரணை எப்போது என வழக்கறிஞர்களும் பொதுமக்களும் அறிந்து கொள்ளலாம்.

Tags : judge ,courtroom ,
× RELATED கெஜ்ரிவால் குற்றம் செய்வதை வழக்கமாக...