×

45 ஆண்டாக சாகுபடி செய்து வரும் விளை நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் நரிக்குறவர்கள் மனு

பெரம்பலூர், ஜூன் 25: 45 ஆண்டுகளாக பயன்படுத்தி சாகுபடி செய்து வரும் விளைநிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென பெரம்பலூர் கலெக்டரிடம் ஏறையூரை சேர்ந்த நரிக்குறவர் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று நடந்தது. இதில் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த நரிக்குறவர் நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் நாங்கள் ஏழை பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள்.ஏறையூர் நரிக்குறவர் காலனியில் 45 ஆண்டுகளாக 120 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் அப்பகுதியில் அரசின் வருவாய் புறம்போக்கு நிலத்தை சீர்செய்து நல்ல தரமான முறையில் விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு கருணை கூர்ந்து நாங்கள் 45 ஆண்டுகளாக பயன்படுத்த வருகிற விளை நிலங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : land ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...