×

நரிக்குறவர்கள் மனு அரியலூர் பகுதியில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

அரியலூர், ஜூன் 25: அரியலூர் பகுதியில் நேற்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் கோடை வெயிலால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கருமேகங்கள் திரண்டு மழை வருவதுபோல் இருந்தது. ஆனால் மழை வராமல் மக்களை ஏமாற்றியது.

இந்நிலையில் நேற்று மாலை அரியலூர் மாவட்டத்தின் பல பகுதியில் மிதமான மழை பெய்தது.அரியலூர், செந்துறை, குழுமூர், பொன்பரப்பி, வி.கைகாட்டி, கீழப்பழுவூர் உள்ளிட்ட பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து வெப்பம் குறைந்து சற்று குளிர்ச்சியாக சீதோஷ்ண நிலை காணப்பட்டது. மாலையில் மிதமான மழை பெய்தது. இரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


Tags : public ,area ,Ariyalur ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...