×

மது குடித்து விட்டு தூங்கிய தொழிலாளி சாவு

ஜெயங்கொண்டம், ஜூன் 25:
ஆண்டிமடம் அருகே மது குடித்து விட்டு தூங்கிய தொழிலாளி அதிகாலையில் இறந்தார்.ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடத்தில் அறிவழகன் என்பவர் நடத்தி வந்த ஹோட்டலில் கூவத்தூரை சேர்ந்த வனத்தையன் (50) என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அறிவழகன் கடையை மூடி விட்டு சென்று விட்டார். வனத்தையன் வேலையை முடிந்ததும் மது அருந்திவிட்டு சாப்பிடாமல் கடையின் எதிர்புறம் படுத்தவர் அதிகாலையில் இறந்து கிடந்தார்.இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் ஹோட்டல் உரிமையாளர் அறிவழகன் புகார் செய்தார். ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் (பொ) மலைச்சாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். சடலத்தை வாங்க உறவினர்கள் யாரும் இல்லாததால் போலீசாரே மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து ஜெயங்கொண்டம் நகராட்சியில் பணியாளர்களின் துணையோடு அடக்கம் செய்தனர்.

பெண் மாயம்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் சந்தை தோப்பு தெருவை சேர்ந்த செந்தில்குமார். இவரது மனைவி கலையரசி (40). இவருக்கு குழந்தை இல்லை.கணவரும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் தனது அக்கா வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 17ம் தேதியன்று தனக்கு உடல்நிலை சரியில்லையென கூறி வீட்டை விட்டு வெளியே சென்றவர் நேற்று வரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து கலையரசியின் அக்கா அமுதா, ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகிறார்.நீர்நிலை ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும்


Tags : Alcohol worker ,
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...