×

செம்பனார்கோவிலில் இன்று மின்நிறுத்தம்

தரங்கம்பாடி, ஜூன் 25: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் பகுதியில் கிடாரங்கொண்டான் மற்றும் மேமாத்தூர் துணைமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், மேலப்பாதி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கருவி ஆக்கூர், காளகஸ்தினாதபுரம், மடப்புரம், திருச்சம்பள்ளி, முடிதிருச்சம்பள்ளி, பொன்செய், உமையாள்புரம், செம்பதனிருப்பு, கீழையூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், மேலக்கட்டளை, பரசலூர், ஆறுபாதி, நல்லுச்சேரி, ஆனைமட்டம், இரட்டைகுளம், மருதூர், வல்லம், குறிஞ்சித்தோட்டம் ஆகிய பகுதிகளுக்கு இன்று (25ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செம்பனார்கோவில் உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் மறைக்காயர் தெரிவித்துள்ளார்.

Tags : Chempanarkovil ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு...